ஓய்வின்றி உழைத்த காவலர்களுக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு

ஓய்வின்றி உழைத்த  காவலர்களுக்கு  பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு

ஓய்வின்றி உழைத்த ஒவ்வொரு காவலருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீராக இருக்க ஒத்துழைத்த அனைத்து தமிழக மக்களுக்கும் அவர்  பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச்செயலாளர், டிஜிபிக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள கடிதத்தில்:தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெயலலிதாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இறுதி ஊர்வலம் சிறப்பாக முடிந்தது. தமிழக அரசு மிகவேகமாக செயல்பட்டதற்கு பெருமையடைகிறேன். காவலரின் பங்கு அப்போலோ, ராஜாஜி அரங்கு, மெரினாவில் ஆகிய இடங்களில் மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு இருந்தது. கடல்போல் திரண்டிருந்த மக்கள் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டனர். சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவல்துறை மீது அக்கறை கொண்டிருந்தார்.
அவரின் இறுதிச் சடங்கு மூடியும் வரை ஓய்வின்றி உழைத்த ஒவ்வொரு காவலருக்கும் எனது பாராட்டுகள். சென்னை மாநாகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் குழுவுக்கு பாராட்டுக்கள். கடல்போல் திரண்டிருந்த மக்கள் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டனர் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top