காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்கம்!

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்கம்!

கடந்த ஜனவரி 1ம் தேதி 2017ம் ஆண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்கத்தில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மதுரைக்கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது அனைத்து அங்கத்தினர்களுக்கும் கேக் மற்றும் இலவசமாக காலண்டர்கள் வழங்கி புத்தாண்டிற்கான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விழாவிற்கு திரு. ஜெகதீசன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலும் திரு.ஜெயதவம், திரு.விஜயராக வன், திரு.கோகுலகிருஷ்ணன், திரு.ஆனந்த்குமார்,  ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சங்க உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் திருவாளர்கள் திரு.தமிழ்செல்வன், திரு. பாலமுருகன், திரு.சந்தீப், திரு.சுரேஷ், திரு.ஜான் ரீகன், பங்கேற்று அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்திருந்தார்கள்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top