தென் ஆப்பிரிக்க அதிபரின் பரபரப்புக் குற்றச்சாட்டு!
Posted on 27/01/2021
தேவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார கூட்டமைப்பு மெய்நிகர் மாநாட்டில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைத்துக் கொண்டு ஏழை நாடுகளுக்கு துரோகம் செய்கின்றன என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
“பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள், தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவில் தடுப்பூசிகளை வாங்கி பதுக்கி வைக்கின்றனர். சில பணக்கார நாடுகள் அவர்கள் மக்கள் தொகையை விடவும் 4 மடங்கு அதிகமாக வாங்கி பதுக்குகின்றனர்.
தடுப்பூசியை வாங்கிப் பதுக்கியவர்கள் ரிலீஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் பிற ஏழை நாடுகள் பயனடைய முடியும்.கொரோனா என்ற தீமைக்கு எதிரான போரில் பயனடைவது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சில நாடுகள் இதில் முன்னுரிமை பெறுவது நல்லதல்ல” என்று சாடினார் தென் ஆப்பிரிக்க அதிபர்.