பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்!
Posted on 17/04/2021
பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டது.
இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் - இ - லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சாத் ரிஸ்வி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்த அமைப்பு சார்பில் பாகிஸ்தான் நாட்டில் பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியது. போராட்டம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல்வேறு பகுதிகளில் கடைகள், அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் நேற்று 5 மணி நேரம் சமூக வலைதளங்கள் அரசால் முடக்கப்பட்டன.