பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தான் தயாரில்லை!
Posted on 25/12/2020
பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி தனது சொந்த ஊரான முல்தானில் கூறியதாவது: ”தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பில்லை.”
இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குப் பொருத்தமான தருணம் இதுவல்ல என்றாா் அவா்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என்று மத்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினா் பதான்கோட் விமான தளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.