ட்ரம்பின் அறிவிப்புக்கு தடை விதித்த ஜோ பிடன்!

ட்ரம்பின் அறிவிப்புக்கு தடை விதித்த ஜோ பிடன்!

எச்-1பி விசா வழங்குவதற்கென குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்பை செயல்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு அதிபர் ஜோபிடன் உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் குறைந்தபட்ச அளவை முன்னாள் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நிர்ணயித்தது. அமெரிக்கர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்பின் உத்தரவால் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அதிக எண்ணிக்கைகளில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த புதிய விதிமுறை வருகிற மே 14ம் தேதி செயல்படுத்தப்போவதாக இருந்தது. இந்த நிலையில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க தொழிலாளர் நலத்துறைக்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top