ட்ரம்பின் அறிவிப்புக்கு தடை விதித்த ஜோ பிடன்!
Posted on 13/03/2021
எச்-1பி விசா வழங்குவதற்கென குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்பை செயல்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு அதிபர் ஜோபிடன் உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் குறைந்தபட்ச அளவை முன்னாள் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நிர்ணயித்தது. அமெரிக்கர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.