பாகிஸ்தான் “ஐஸ்” தொழிற்சாலையில் வெடி விபத்து!
Posted on 24/12/2020
அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில், 'ஐஸ்' தொழிற்சாலையில், நேற்று கொதிகலன் ஒன்று வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் சிக்கி, எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தால், அருகிலுள்ள ஆலைகளும் வீடுகளும் சேதமடைந்தன.