சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Posted on 19/02/2021
இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் தனது படைகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பியது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43-க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘பீப்புள்ஸ் டெய்லி’யில் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதில், உயிரிழந்த 4 சீன வீரர்களுக்கும் சீனா விருது அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.