ஊரடங்கால் கை மேல் பலன்!
Posted on 13/04/2021
பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து உணவகங்கள், கடைகள், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டன. பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா கொல்லுயிரி அதி தீவிரமாக பரவியதை அடுத்து, கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கடும் நடவடிக்கைகளுக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் எதிரொலியாக பிரிட்டன் முழுவதுமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.