தடுப்பூசியினால் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை!
Posted on 18/03/2021
தற்போது அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.
இதையடுத்து தற்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.