நிடந்தனைகளால் பயனாளர் நன்மதிப்பையிழக்கும் வாட்ஸ்அப்!
Posted on 09/02/2021
கடந்த காலங்களில் மிகவும் பிரபல்யமாக காணப்பட்ட குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆனது தற்போது பயனர்கள் மத்தியில் தனது பிரபல்யத்தை இழந்து வருகின்றது.
இதற்கு காரணம் அண்மையில் வெளியிடப்பட்ட நிபந்தனைகள் ஆகும். இப்படியிருக்கையில் மொபைல் சாதனங்கள் தவிர டெக்ஸ் டாப் கணினிகள் மற்றும் இணைய உலாவிகளில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
அதாவது முன்னர் QR குறியீட்டினை ஸ்கான் செய்வதன் ஊடாக இணையம் மற்றும் டெக்ஸ்டாப் கணினிகளில் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போது பயோமெட்ரிக் அனுமதி வழங்கும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி கைவிரல் அடையாளம் அல்லது பேஸ்ஸ் ஐடியை பயன்படுத்த வேண்டும்.