எண்ணற்ற கணக்குகளை நீக்கிய ட்விட்டர்!

எண்ணற்ற கணக்குகளை நீக்கிய ட்விட்டர்!

ட்விட்டர் நிறுவனம் 337 அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த அக்கவுண்ட்கள் அர்மீனியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 238 அக்கவுண்ட்கள் ஈரானில் இருந்து செயல்பட்டதாகவும், இவை அந்நிறுவன வழிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து உள்ளது.

100 அக்கவுண்ட்கள் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்தது. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனை குறிவைத்து செயல்படுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. அர்மீனியாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 35 அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 337 அக்கவுண்ட்களும் விதிகளை மீறியதாக கூறி ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அந்நிறுவன வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top