புதிய திரவ எரி பொருள் கண்டுபிடிப்பு

புதிய திரவ எரி பொருள் கண்டுபிடிப்பு

இப்போது பாவனையில் உள்ள திரவ எரிப் பொருட்கள் மீள முடியாத எரிப் பொருட்களாக காணப்படுகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட சில வருடங்களுக்கு பின்னர் இந்த வகை எரிப் பொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவும். இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக புதிய திரவ எரிப்பொருள் ஒன்றினை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். “சோலார் தெர்மல் ஃபியுவல்”என்று சொல்லப்படுகின்ற இந்த எரிப்பொருளானாது சூரிய சக்தியை சேமித்து வைத்து அதனை மீண்டும் பயன்படுத்தக் கூடிய அளவில் அமைந்திருக்கும். 
 
சுருங்கச் சொல்லப் போனால் ஒரு ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்கலத்தைப் போலவே செயல்படக்கூடியதாகும் இது. இந்த சூரிய சக்தி சேமிப்பானது பல வருடங்கள் கழித்தும் பயன்படுத்தக் கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பல்வேறு விதமான எரிப் பொருட்களுக்கு தட்டுபாடுகள் தோன்றக் கூடிய நிலையில், இந்த சூரிய சக்தி சேமிப்பு அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட திரவ எரிப்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த திரவ எரிப்பொருளை சுவீடனை சார்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். 
 

 

Tags: Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top