சென்னை வந்த வெங்கையா நாயுடு: விமான நிலையத்தில் வரவேற்பு!

சென்னை வந்த வெங்கையா நாயுடு: விமான நிலையத்தில் வரவேற்பு!

சென்னை வந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை ஆளுநர், அமைச்சர், மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய உள்ள கருணாநிதி சிலை சென்னை வந்தது. இந்த சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
 
தமிழக சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "திருவாரூரில் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி, அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
 
இந்நிலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சிலை அமைக்க பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி ரூ.1.56 கோடி செலவில் இந்த சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
பெரியார், அண்ணா சிலைகளுக்கு நடுவே கலைஞர் சிலை அமைய உள்ளது. கலைஞர் சிலையை திறந்து வைத்து உரையாற்ற உள்ளார் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. மே 28ஆம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top