புயல் சேத சீரமைப்பு நிதி!
Posted on 09/12/2020
நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி செய்துள்ளது தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
புரெவி புயல் காரணமாக, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், கடலூர், நாகை மாவட்டத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி நேற்றுமுதல் புயல் காரணமாக பாதிகப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.