சிறையில் கன்னடம் கற்றார் சசிகலா!
Posted on 10/12/2020
சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய அவர் தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை பலனளிக்காமல் போயின.
சசிகலா சிறையில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறாரார்; நான்கு ஆண்டுகளில் சசிகலா அரை ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்து, 1 டன் பப்பாளி விளைவித்துள்ளதாகவும் பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கைக்காய் உட்பட, பல காய்கறிகள் விளைவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
கல்வி கற்காத கைதிகளுக்கு, கல்வி கற்பிக்க சிறைக்கு ஆசிரியர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை கற்றுக் கொண்டார் சசிகலா. இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில், மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக பெங்களூர் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா மட்டுமல்லாமல் இளவரசியும் தற்போது கன்னடத்தில் பேசிவருகிறார் என்கிறார்கள்.