தினகரனின் மனுவை மாநகர உரிமையியல் நீதிமன்றம் ஏற்றது!
Posted on 16/03/2021
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பா் மாதம் இறந்தாா். அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தோ்வு செய்யப்பட்டனா். சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2017 செப்டம்பா் 12 -இல் நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளா் பதவியை ரத்து செய்து தீா்மானம் இயற்றப்பட்டது. அந்தப் பதவிகளுக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற புதிய பதவிகளை உருவாக்கி, அந்தப் பதவிகளுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நியமித்து தீா்மானம் இயற்றப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோா் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா். அந்த மனுவில், இந்த தீா்மானம் சட்டவிரோதமானது. எனவே இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீா்மானங்களையும் செல்லாது என அறிவிப்பதோடு, கட்சியின் பொதுச் செயலாளா், துணை பொதுச் செயலாளா் பதவியிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தனா்.