தினகரனின் மனுவை மாநகர உரிமையியல் நீதிமன்றம் ஏற்றது!

தினகரனின் மனுவை மாநகர உரிமையியல் நீதிமன்றம் ஏற்றது!

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பா் மாதம் இறந்தாா். அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தோ்வு செய்யப்பட்டனா். சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2017 செப்டம்பா் 12 -இல் நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளா் பதவியை ரத்து செய்து தீா்மானம் இயற்றப்பட்டது. அந்தப் பதவிகளுக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற புதிய பதவிகளை உருவாக்கி, அந்தப் பதவிகளுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நியமித்து தீா்மானம் இயற்றப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோா் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா். அந்த மனுவில், இந்த தீா்மானம் சட்டவிரோதமானது. எனவே இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீா்மானங்களையும் செல்லாது என அறிவிப்பதோடு, கட்சியின் பொதுச் செயலாளா், துணை பொதுச் செயலாளா் பதவியிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டாா். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பதில்மனு தொடா்பாக சசிகலாவின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீபதி விசாரணையை வரும் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top