ஐபிஎலில் சொதப்பும்… இந்திய வீரர்கள் ஓரம் கட்டப்படுவார்களா?

ஐபிஎலில் சொதப்பும்… இந்திய வீரர்கள் ஓரம் கட்டப்படுவார்களா?

ஐபிஎலில் சொதப்பும் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காத என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதில் புதிய அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி வருகிறது.
 
சாம்பியன் அணிகளும் மட்டுமல்ல, இந்தியாவின் நட்சத்திர வீரர்களும் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னமும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படி பல இந்திய நட்சத்திர வீரர்கள் சொதப்பி வருவது கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
ஓபனருக்கான இடங்களில் இருக்கும் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கே.எல்.ராகுல் ஆகியோரில் ராகுல் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மற்ற இருவரும் தொடர்ந்து படுமட்டமாக விளையாடி வருகிறார்கள்.
 
அடுத்து மிடில் வரிசை வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிரடிக்கு பேர்போன ரிஷப் பந்தும் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
ஒரேயொரு நல்ல விஷயம் ஹார்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கலக்கி வருகிறார். அடுத்து பந்துவீச்சு துறையில் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல் போன்றவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜடஜா கேப்டன்ஸி அழுத்தம் காரணமாக பீல்டிங்கிலும் கூட கோட்டைவிட்டு வருகிறார்.
 
இப்படி இந்திய வீரர்கள் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வருவதால், அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களுக்குதான் இனி இந்திய அணியில் இடம் கிடைக்குமா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயரின் நிலைமை என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘ஐபிஎலில் விளையாடுவதை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம். ஒரேயொரு தொடரில் விளையாடுவதை வைத்து, அதுவும் அழுத்தங்களுடன் செயல்படும் புதுமுக இளம் வீரர்களுடன் விளையாடுவதை வைத்து இந்திய வீரர்களை எடைபோடுவது எந்த விதத்தில் ஞாயம். தற்போது, ஐபிஎலில் சொதப்புபவர்கள் அனைவருமே, அதற்குமுன்புவரை அபாரமாக விளையாடியவர்கள்தான்’’ எனக் கூறினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top