மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் விராட் கோலி!

மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் விராட் கோலி!

முதலில் விராட் கோலிதான் இந்திய அணி கேப்டன், நான் துணைக்கேப்டன், அவர் அணியில் எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் நடைபெறும் முதல் டெஸ்டில் இதுவாகும்.
 
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. அதன்பின் விராட் கோலி, அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருந்ததால் சொந்த நாடு திரும்பினார்.
 
விராட் கோலி இல்லை, வீரர்கள் காயம், நெருக்கடி ஆகியற்றிற்கிடையில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பொறுப்பு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, ஒன்றை டிரா செய்து தொடரை 2-1 எனக் கைப்பற்றினார்.
 
இதனால் ரஹானேவை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலி அணிக்கு திரும்பி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top