பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவின் சாதனை!
Posted on 24/12/2020
இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உத்தேச அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. சூர்யகுமார் யாதவ் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. சூர்ய குமார் பேட்டிங் செய்யும்போது சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் பந்து வீசினார். அர்ஜுன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் விளாசினார்.
சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.