சுரேஷ் ரெய்னாவின் சாதனை!
Posted on 19/04/2021
ஐபிஎல் போட்டியில் 352 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கிறிஸ் கெயில். ரோஹித் சர்மா, தோனி, கோலி ஆகிய இந்திய வீரர்கள் 200-ம்கும் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ளார்கள்.
இந்நிலையில் 195 ஆட்டங்களில் 198 சிக்ஸர்கள் அடித்துள்ள சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 200 சிக்ஸர்கள் என்கிற இலக்கை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பவுண்டரிகள் எண்ணிக்கையிலும் அவர் சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. இதுவரை 497 பவுண்டரிகள் அடித்துள்ளார் ரெய்னா. இதுவரை ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவன் (615), வார்னர் (519), விராட் கோலி (512) ஆகிய வீரர்கள் மட்டுமே 500 பவுண்டரிகள் அடித்துள்ளார்கள். இன்னும் மூன்று பவுண்டரிகள் அடித்தால் சுரேஷ் ரெய்னாவும் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்து விடுவார்.