பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வி - வெண்கலம் வென்றார்!

பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வி - வெண்கலம் வென்றார்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசிய பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசிய பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
 
முன்னதாக, உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஹீ பிங் ஜியோவை (சீனா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.
 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
 
மணிலாவில் நடந்த அரையிறுதியில் ஜப்பானின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான அகானே யமாகுச்சியிடம் மூன்று செட்கள் ஆடி கடைசியில் தோல்வியடைந்து, பி வி சிந்து தனது இரண்டாவது ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 
தொடக்க ஆட்டத்தை 21-13 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது ஆட்டத்தில் 13-11 என முன்னிலை வகித்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும், சிந்துவுக்கு கிடைத்த நேரத்தை வீணடித்ததற்காக ஒரு புள்ளி பெனால்டி பெற்றதன் காரணமாக போட்டியே முற்றிலும் மாறியது, அந்த புள்ளியில் இருந்தே, அவரது எதிராளி அவரது ஆட்டத்தைக் கண்டுபிடித்தார், சிந்துவை மீண்டும் எழும்ப விடவில்லை.
 
ஆனால் ஒரே ஆறுதல் என்னவெனில் யாமாகுச்சிக்கு எதிராக சிந்து 13-9 என்று மொத்த போட்டிகள் கணக்கில் வெற்றியில் முன்னிலை வகிக்கிறார் என்பதே.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top