ஹெல்மெட் வேண்டாம் காயம் அடைந்த நடுவர்
Posted on 17/12/2016
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
அப்பொழுது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பால் ரீபெல் நடுவராக பணியாற்றினார். அவர் லெக் அம்பயராக நின்ற போது புவனேஸ்வர் பீல்டிங் செய்து வீசிய பந்து ரீபெல்லின் பின்பக்க மண்டையில் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில் கீழே விழுந்தார்.
சில நாட்கள் ஒய்வு இருந்ததால் அவர் நடுவராக பணியாற்ற வில்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று தொடங்கிய போட்டியில் நடுவராக பணியாற்ற தயாராக இருந்தார். ஆனால், அவரது உடல்நிலையை காரணம் காட்டி ஐ.சி.சி. அவரை நடுவராக பணியாற்ற அனுமதிக்கவில்லை.
தலையில் காயம் ஏற்பட்டதால் இனி மேல் பங்கேற்கும் போட்டியின் போது தலைக்கவசம் அணிந்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து ரீபெல் கூறுகையில் நடுவராக பணியாற்றினால், ஹெல்மெட் அணிய மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக கூறினார். மேலும், டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் தலைக்கவசம் அணிந்து கொண்டு நடுவராக பணியாற்றினால், அதிக சுமையாக இருக்கும். அதே வேளையில் வெப்பமும் அதிக அளவில் தலையை தாக்கும். இது நடக்கக்கூடிய காரியம் அல்ல என்று பதில் கூறினார்.
Tags: News, Sports, Coaching