கிரிக்கெட்டில் புதியோருக்குக் காண்பிக்கப்படும் புதிய வழி!
Posted on 20/02/2021
14-வது ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் வந்தார். ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணியே ஏலத்தில் எடுத்தது. அர்ஜுன் தேர்வானது சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.