ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

பின்லாந்தில் நடைபெற்ற நூர்மி விளையாட்டு போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் ஈட்டி எறிந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். 

பின்லாந்தில் பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்வில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
 
இதில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது.
 
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top