சுவிட்சர்லாந்தின் பெடரர் அதிர்ச்சி தோல்வி!
Posted on 13/03/2021
தோகாவில், ஏ.டி.பி., கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–6’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 42வது இடத்தில் உள்ள ஜார்ஜியாவின் நிகோலோஸ் பசிலாஷ்விலி மோதினர். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய பெடரர், 2வது செட்டை 1–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 5–7 என போராடி கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 50 நிமிடம் நீடித்த போட்டியில் பெடரர் 6–3, 1–6, 5–7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.