ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!
Posted on 23/04/2022
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் கேப்டம் ரோகித் ஷர்மா மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
வியாழக்கிழமை சென்னை – மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இது ஐபிஎல் போட்டிகளில் ரோகித் ஷர்மாவுக்கு 14வது டக் ஆவுட் ஆகும். ரோகித் ஷர்மாவை தொடர்ந்து பியூஷ் சாவல் (13), ஹர்பஜன் சிங் (13), மந்தீப் சிங் (13) மற்றும் பார்த்தீவ் பட்டேல் (12) உள்ளிட்டவர்கள் அதிக முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதை அடுத்து, நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரையும் மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.
Tags: News