சென்னை சூப்பர் கிங்ஸ் அமோக வெற்றி!
Posted on 17/04/2021
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 16/04/2021 - இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.
அதைத் தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களை எடுத்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக, மொயின் அலி 46, டூ ப்ளஸிஸ் 36 ரன்களை எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி 2, அர்ஸ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.