நீண்ட நாள் காத்திருந்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு?
Posted on 21/04/2022
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இன்றை போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் இதுவரை நடந்த எந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுமே புள்ளிப்பட்டியலின் கடைசி இடங்களில் இருப்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகிறது.
Tags: News