சிஎஸ்கே அணி கிரிக்கெட் வீரர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி!
Posted on 12/03/2021
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை இந்தியாவின் ஆறு நகரங்களில் களைகட்டவுள்ளது. இதற்காக 8 அணி வீரர்களும் தற்போது இருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தவிற மற்ற வீரர்கள் ஐ.பி.எல் அணியுடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 11-ம் தேதிலிருந்து பயிற்சியை தொடங்கினர்.