சிஎஸ்கே அணி கிரிக்கெட் வீரர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி!

சிஎஸ்கே அணி கிரிக்கெட் வீரர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை இந்தியாவின் ஆறு நகரங்களில் களைகட்டவுள்ளது. இதற்காக 8 அணி வீரர்களும் தற்போது இருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தவிற மற்ற வீரர்கள் ஐ.பி.எல் அணியுடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 11-ம் தேதிலிருந்து பயிற்சியை தொடங்கினர்.

கடந்த 4 ம் தேதி சென்னை வந்த தோனி ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு நேற்றுமுதல் வலைபயிற்சியை தொடங்கினார். தோனி தலைமையில் அம்பதி ராயுடு, கெய்க்வாட், தமிழக வீரர்களான ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோரும் வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top