காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய வர்தா! சென்னையில் நீடிக்கும் மழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய வர்தா! சென்னையில் நீடிக்கும் மழை!

75 வருடங்களுக்கு பிறகு சென்னையை அசைத்து பார்த்த வர்தா புயல் நேற்று பகல் 12.45 மணி அளவில் சென்னை அருகே கரையை கடந்து சென்றது.

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் கடும் சீற்றத்துடன் வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் வீழ்ந்தன. மேலும், சில வீடுகளின் மேற்கூரைகள் காற்றின் வேகத்தில் பறந்தன. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களை சிதைத்த வர்தா, திருவண்ணாமலை வழியாக கரையை கடந்து தற்போது கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருக்கு இடைப்பட்ட இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.

"1941-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலைப் போல, 75 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வர்தா புயல் சென்னையை அசைத்துப் பார்த்துள்ளது. மேலும், இது தற்போது கரையை கடந்தாலும், தமிழக வட மாவட்டங்களில் மழை நீடிக்கும். குறிப்பாக சென்னை,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top