பெண்கள் விமானத்தில் தனியே பறக்கத் தடை
Posted on 28/03/2022
ஆப்கானிஸ்தானில் இருந்த சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டு வரை தாலிபன்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது, விரும்பிய உடையை அணிவது என அனைத்து விவகாரங்களிலும் தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், தாலிபன்கள் ஆட்சிப்பொறுப்பேற்று 7 மாதங்களுக்கு பின்பு, கடந்த 23-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பள்ளிகள் மூடப்பட்டன. அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை விடப்படுவதாக தாலிபன் அரசு அறிவித்துள்ளது. இதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.
Tags: News