ஓ.பி.எஸ் - தீபா திடீர் கைகோர்ப்பு : இனி என்ன நடக்கும்?

ஓ.பி.எஸ் - தீபா திடீர் கைகோர்ப்பு : இனி என்ன நடக்கும்?

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தீபா கூறினார். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் போகப் போவதாகவும் அறிவித்தார். ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் இருக்க, திடுமென, சசிகலாவுக்கு எதிராக செயல்படும் முதல்வர் பன்னீர்செல்வமும், தீபாவின் தயவை நாடினார். அதன் அடிப்படையிலேயே, 7ம் தேதி இரவு, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு பன்னீர்செல்வம் சென்றார். அதே நேரம், தீபாவும் அவரது ஆட்களும் வந்தனர். பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு, ஆதரவைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இருவரும், முதல்வர் இல்லத்துக்குச் சென்றனர். அங்கு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு மூத்தத் தலைவர்களுடன், தீபா பேசினார்.

பின், பன்னீர்செல்வம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். பின், ''நான், முதல்வர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். சசிகலா, அரசியலில் இருந்து வீழ்த்தப்பட வேண்டும்'' என்றார் தீபா.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top