வாக்காளர் குழப்பத்தை தவிர்க்க இரு கட்ட தேர்தல்?
Posted on 21/09/2016
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தல்களின் மூலமாக, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், இதற்காக வாக்காளர்கள் நான்கு வாக்குகளை அளித்து பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களின் மூலமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக நகர்ப்புற வாக்காளர்கள் ஒரு வாக்கு மட்டும் பதிவு செய்தால் போதும் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அதே சமயம் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
Tags: News, Madurai News