பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது
Posted on 09/01/2017
பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து விடப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான 26 கணினி முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
சென்னை கோயம்பேட்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 26 கணினி முன்பதிவு மையங்களை தொடங்கி வைத்தார். பெண்களுக்கு 2 மையங்களும், முதியோர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் 2, பூந்தமல்லியில் ஒரு மையமும் தொடங்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக 11 ஆயிரத்து 270 சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 3 நாட்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, அடையாறு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி என 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 300 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் பயணிகள் இம்மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் WWW.TNSTC.IN என்ற வலைத்தளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News, Madurai News, Lifestyle