பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து விடப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான 26 கணினி முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

சென்னை கோயம்பேட்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 26 கணினி முன்பதிவு மையங்களை தொடங்கி வைத்தார். பெண்களுக்கு 2 மையங்களும், முதியோர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் 2, பூந்தமல்லியில் ஒரு மையமும் தொடங்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக 11 ஆயிரத்து 270 சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11 முதல் 3 நாட்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, அடையாறு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி என 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 300 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் பயணிகள் இம்மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் WWW.TNSTC.IN என்ற வலைத்தளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top