நம்பிக்கை வாக்கெடுப்பு... சட்டசபை கதவுகள் மூடப்பட்டது பெரும் பரபரப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பு... சட்டசபை கதவுகள் மூடப்பட்டது பெரும் பரபரப்பு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். சட்டசபை கதவுகள் தற்போது மூடப்பட்டு விட்டது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை ஆளுநரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்காக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது. இன்று சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது பேசினார். இதையடுத்து சட்டசபை கதவுகள் மூடப்பட்டு விட்டன. உள்ளே கடும் அமளி நிலவும் நிலையில் கதவுகளை மூடியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top