செப்-7 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்!
Posted on 30/08/2017
சிவகங்கை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வரும் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், வரும் 7ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
மேலும், 7ஆம் தேதி தாசில்தார் அலுவலகங்களின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், 8ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்தார். அப்போதும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 11ஆம் தேதிக்கு மேல் போராட்டம் தீவிரமடையும் என கூறினார்.
இந்த முடிவுகள் சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி எடுக்கப்பட்டது என்று சுப்பரமணியன் கூறினார். போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தியும் இதுவரை அவர்களுக்கு எந்த தீர்வும் அரசு காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Madurai News