போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி அய்யாக்கண்ணு மயக்கம்!
Posted on 05/04/2017
டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மயக்கம் அடைந்தார்.
கடன் தள்ளுபடி, கூடுதல் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 23 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தலையில் முக்காடு போட்டு மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கை கால்களை கட்டிக்கொண்டு தரையில் உருண்டும் தலைகீழாக நின்றும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திடீரென மயக்கம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருச்சியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரும் திடீரென மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Tags: News, Lifestyle, Art and Culture