சசிகலா தலைமை விலை பேசும் தலைமை - கிருஷ்ணகிரி எம்.பி
Posted on 11/02/2017
முதல்வர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி எம்.பி., அசோக் குமார் கூறியதாவது: தொண்டர்கள் இல்லாத தலைமையாக தற்போது சசிகலா தரப்பினர் உள்ளனர். இரண்டு மாதமாக பணியாற்றி மக்களின் ஒட்டுமொத்த அன்பை பெற்ற பன்னீரிடம் என்ன குறை கண்டீர்கள்? குறுக்கு வழியில் ஆட்சி வர வேண்டும் என கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தீர்கள், தொண்டர்கள், மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்ய வைத்த உங்களுக்கு மக்களுக்கு பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் பன்னீர் தான் வருவார். கட்சிக்காரனை விலை பேசிய தலைமை அங்கு தான் உள்ளது.
வீட்டில் வேலைக்காரியாக இருந்தவர் முதல்வராக வேண்டுமா? வேலைக்காரி வீட்டு வேலையை தான் செய்ய வேண்டும்; முதல்வராக ஆசைப்படலாமா? தொகுதிக்குள் சென்றால் விரட்டுகிறார்கள்; அடிக்கிறார்கள்; பொது மக்கள் எங்களை திட்டுகிறார்கள். ‛உப்பு போட்டு சோறு சாப்பிடுறியா' என, கேட்கிறார்கள். அதிமுகவை யாராலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags: News, Madurai News, Art and Culture