சசிகலாவின் அதிரடி நடவடிக்கையால் அதிருமா அதிமுக?
Posted on 21/08/2017
சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு மீது கூடுதல் மனுவை சசிகலா தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்ததை சீராய்வு செய்ய வலியுறுத்தி சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா காலமானார் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News, Madurai News