ரேஷன் கார்டு இனி வீட்டுக்கே வந்துவிடும்!
Posted on 08/04/2022
உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டு நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறை வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்தார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர்.
உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டு நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், சிவகங்கை, அரியலூர், வேலூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் தேவைக்கேற்றவாறு 1000 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவில் மொத்தம் ரூ.54 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் 12 வட்ட செயல்முறைக் கிடங்குகள் கட்டப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினி மயமாக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags: News