பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
Posted on 10/09/2016
ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாராலிம்பிக்கி உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் வெண்கலம் வென்ற பஞ்சாப் வீரர் வருண்சிங் பாடிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக்கில் வீரர்கள் பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Tags: News, Sports