அபுதாபியில் 11 ஆண்டுகளாக தமிழ்ச்சங்கம் சார்பாக நடித்துவரும் கபாடி போட்டி
Posted on 01/09/2016
அபுதாபி விளையாட்டு கழகத்தின் ஆதரவுடன் அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய கபடி போட்டியில் பங்குகொண்ட வீரர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கள் மாலை புட்லான்ட் உணவகத்தின் அரங்கத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக UAE எக்ஸ்சேஞ்ச் தலைவர் திரு சுதிர்குமார் ஷெட்டியும், ஏர்இந்தியாவின் அபுதாபி மேலாளர் டாக்டர் நவீன்குமார் அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.
UAE எக்ஸ்சேஞ்ச் தலைவர் திரு சுதிர்குமார் ஷெட்டி அவர்கள் தனது உரையில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கபடி போட்டி நடத்துவதில் பங்கு கொண்டு வருவதற்காக மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே நட்புறவு அதிகரிக்கும் என்றார். தொடர்ந்து இந்த போட்டிகள் நடத்த தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.
ஏர்இந்தியாவின் அபுதாபி மேலாளர் டாக்டர் நவீன்குமார் அவர்கள் ஏர் இந்தியா விமான சேவை தாயகத்துக்கு செல்வதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. கபடி போட்டிக்கான ஆதரவினை இந்த நிறுவனம் தொடர்ந்து அளிக்கும் என்றார்.
கடந்த 11 ஆண்டுகளாய் தமிழ்ச்சங்கம் நடத்திவரும் இந்த நல்லசேவையில் இணைந்து நடுவராய் பங்களித்து வரும் சகோதரர் பாபுசாஜனுக்கு சிறப்பு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. தலைவர் ரெஜினால்ட், செயலாளர் ராஜு, பொருளாளர் சந்திரன், இளைஞரணி கருணாநிதி முதலிய நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது, காயல் அன்சாரி, லெப்பை தம்பி, பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், வர்த்தக பிரமுகர்கள் ஹமீத், மஜீத், சல்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags: News