பன்னீர் செல்வத்தை அடுத்து ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்தும் சசிகலா!
Posted on 07/02/2017
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி, தியானம் செய்தார். பிறகு அவர் அளித்த பேட்டியில் சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்ற தோற்றம் பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
இந்த எண்ணத்தை மாற்ற, சசிகலாவும் இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்ல உள்ளார். அங்கு உருக்கமாக விழுந்து கும்பிட உள்ளார். பிறகு உருக்கமாக பேட்டியளிக்க உள்ளார் என்கிறது அதிமுக வட்டாரம்.
Tags: News, Lifestyle