பழிவாங்க துடிக்கிறது ஜெ.வின் ஆன்மா - கேரளா ஜோதிடர்!

பழிவாங்க துடிக்கிறது ஜெ.வின் ஆன்மா - கேரளா ஜோதிடர்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவை பற்றி பிரபல கேரள ஜோதிடர் வேங்கட சர்மா பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், ஜெ ஆன்மா, இன்னும் போயஸ் கார்டனையும் நினைவிடத்திலும் சுற்றிக் கொண்டிருக்கிறதாம். பிரம்ம முஹூர்த்தமான அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெ. ஆன்மா சுற்றுவதை உணரலாம் என்கிறார். யாரும் ஜெயலலிதா ஆன்மா அமைதி அடைய எதுவும் செய்யவில்லையாம். அதனால் இன்னும் சிறிது காலம் கழித்து, தான் விரும்பியதை நிறைவேற்றிவிட்டு அது சென்றுவிடும் என்கிறார்.

ஜெயலலிதா இறந்து போனதாக சொல்லப்பட்ட நாளுக்கு 2 மாதம் முன்பே அவர் இந்த உடலைத் துறந்துவிட்டாராம். ஆனால், அவர் இறந்தது தெரியாமல், லட்சக்கணக்கான தொண்டர்கள், கோயிலில் அவர் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தும், அவருக்காக தெய்வத்திடம் முறையிட்டதினாலும், அவருடைய ஆன்மா அங்கே சித்தர் நிலையில் குடி கொண்டதாம். அந்த ஆன்மாவுக்கு போகர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டினார்களாம்,. பின்னர் அவர்கள் சென்றுவிட, இப்போது இடைக்காட்டுச் சித்தரின் வழிகாட்டலில் ஜெயலலிதா ஆன்மா உலவுகிறதாம்.

தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக சசிகலா குடும்பத்தினர் மீது கோபத்துடன் இருக்கிறதாம் ஜெ. ஆன்மா. அதனால், வம்ச நாசம் செய்துவிட்டுத்தான் போவேன் என்று சொல்கிறாராம். சசிகலாவை ஒதுக்கி வைப்பதையே ஜெயலலிதா ஆவி விரும்புகிறதாம். தனக்கு பணிவிடைகள் செய்ததையும் உடன் இருந்ததையும் மட்டுமே தான் விரும்பியதாகவும், பதவிக்கு அவர் வருவதை தாம் விரும்பவில்லை என்றும் சொல்கிறதாம் ஜெ. ஆன்மா!

எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை, ஓரளவு நம்பிக்கைக்கு உரியவர்களாக, விசுவாசிகளாகக் கருதுகிறாராம். எனவே இந்த ஆட்சியை கலைக்க விடமாட்டேன் என்று கூறும் ஜெ. ஆன்மா, அடுத்த தேர்தலிலும் என் ஆட்சியே அமையும் என்று உறுதியாகக் கூறுகிறதாம்.

தினகரன் குறித்து எந்தப் பேச்சையும் எடுக்காமல், தலையைத் திருப்பிக் கொண்டு, தவிர்க்கும் மூச்சினை விடுகிறதாம். அதே நேரம், தீபா மீது கோபத்திலும் அதிருப்தியிலும் உள்ளதாம். தனது வேதா இல்லத்தையும் தன் சொத்துகளையும் யார் அனுபவிக்க நினைத்தாலும், அவர்களை வம்ச நாசம் செய்து விடுவேன் என்று கூறுகிறதாம்.

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், தான் ஆசைப்பட்டதில் பத்தில் இரண்டுதான் நிறைவேறியது என்றும், ஏழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், எளியவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் அது முடியாமல் போனது என்றும் ஜெ ஆன்மா கூறியதாம்.

மேலும், ஜெயலலிதா ஆன்மாவை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துவிட்டால், ஆன்மாவிற்கான சக்தியால் எதனையும் செய்து விட முடியாது என்பதற்காக, சிலர் ஜெ. ஆன்மாவை பாட்டிலில் அடைக்க முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெ. ஆன்மா பழிவாங்கும் பட்டியலில் 30 பேர் வரை உள்ளனர் என்று கூறும் வேங்கட சர்மா, இன்னும் ஒரு வருடத்துக்குள் பாருங்கள், எத்தனை பேரை காவு வாங்கும், எப்படி வம்ச நாசம் ஏற்படும் என்பதை! என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

சாமியாரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top