அமெரிக்காவில் நுழைய பாக். குக்கும் தடை விதிக்கப்படலாம்!
Posted on 29/01/2017
பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் முடிவு எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என, அமெரிக்கா சூசகமாக தெரிவித்துள்ளது.
இது அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரின்ஸ் பெரிபஸ் கூறியதாவது: ஈரான், ஈராக், லிபியா, சூடான், ஏமன் சிரியா மற்றும் சோமாலியா ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனல்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஒபாமா இருந்த போது, இந்த ஏழு நாடுகளிலும் பயங்கரவாத செயல்கள் நடக்கின்றன என கண்டறியப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே இந்த முடிவை தற்போதைய அதிபர் எடுத்துள்ளார். எதிர்காலத்தில், பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படலாம். தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags: News, Lifestyle