தமிழக முதல்வரின் தனிப்பிரிவு செயலர் ராஜினாமா!
Posted on 07/02/2017
மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் பதவியில் இருந்த சாந்தா ஷீலா நாயரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் முடிந்தது. அப்போது அவரை அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கவனிக்கும் தனி அதிகாரியாக அப்போதைய ஜெயலலிதா நியமித்தார். அந்த பதவியில் இருந்து தான் தற்போது சாந்தா ஷீலா நாயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வது தொடர்கிறது. கடந்த வாரம் தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து தற்போது சாந்தா ஷீலா நாயர் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தனது சொந்த காரணங்களுக்காக சாந்தா ஷீலா நாயர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: News, Lifestyle, Art and Culture