மெரினாவில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு!

மெரினாவில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் மெரினாவில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு ‌ காவல்துறை அறிவித்தனர். இதுகுறித்து சென்னை காவல்துறை அறிக்கை வெளியி்ட்டது. போராட்டத்திற்கான நோக்கங்கள் நிறைவேறி விட்டதாகவும் எனவே போராட்டக்காரர்கள் உடனடியாக கலைந்து செல்லும்படியும் அதில் கூறப்பட்டது.

ஆனால் நிரந்தர சட்டம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து போராட்டம் தொடர்ந்தது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்களாகவே கலைந்து செல்ல இளைஞர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியது. போராட்டக்காரர்கள் கலைய மறுத்ததை அடுத்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனையடுத்து இளைஞர்கள் கடற்கரை நோக்கி சென்றனர்.இந்நிலையில் மெரினாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்கள் பட்டினம்பாக்கம் வழியாக வந்து மீண்டும் ஒன்று கூடினர். நிரந்தர சட்டம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top