தனிமனித ரகசியம் அடிப்படை உரிமையே: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Posted on 24/08/2017
ஆதாரில் வழங்கப்படும் தனிமனித ரகசியங்கள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், தனிமனித ரகசியங்களை பாதுகாப்பது அடிப்படை உரிமைதான் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கயுள்ளது. ஆதார்முறை தனிநபர் தகவல் ரகசிய பாதுகாப்பை மீறுவதாக உள்ளது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கைவிசாரசணை செய்தது.
தனிநபர் சார்ந்த தகவல் ரகசியத்தன்மை என்பது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என ஏற்கனவே கடந்த வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். ஆனால், ஆதார்முறை வருகைக்கு பின் அந்த தீர்ப்பானது கேள்விக்குறியானது.
இதனையடுத்து இன்று நடந்த விசாரணையில், தனிமனித ரகசியம் அடிப்படை உரிமையே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஆதார் கட்டாயமாக்குவது பற்றிய எந்த விளக்கங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை . இந்த தீர்ப்பின் மூலம் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Tags: News, Madurai News