தகனம் செய்யப்பட்டது ”சோ”வின் உடல்
Posted on 07/12/2016
முன்னாள் நடிகரும், சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்த துக்ளக் பத்திரிக்கை இதழின் ஆசிரியர் சோவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த மூத்த பத்திரிகையாளர் திகழ்ந்தவர் சோ. உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சோ இன்று அதிகாலையில் காலமானார். எம்.ஆர்.சி., நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, அஜித்குமார் என சினிமா நட்சத்திரங்களும், பொது மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி,கருணாநிதி, உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதன் பின்னர், அவரது வீட்டில் இருந்து சோ உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கை அவரது மகன் ஸ்ரீதர் செய்தார். இதன் பின்னர் சோ உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்களில், சோ உறவினர்கள்,, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, வாசன், இல.கணேசன், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி பொன் வண்ணன், பொது மக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags: News